Tuesday, August 10, 2010

வரலாறு

வடகாடு என்ற கிராமம் முற்றிலும் மிக குறுகிய காலத்திற்குள் உருவாக்கப்பட்ட கிராமம் ஆகும்.அது எவ்வகையில் என்றால் இப்பகுதில் எந்தவொரு கட்டிடமோ,வீடுகளோ அல்லது பழங்காலத்தை வெளிப்படுத்தும் அடையாளங்ககளோ காணப்படவில்லை.மேலும் இக்கிராமத்தின் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் வழியாகவே வரலாற்றை கொணர முடிகிறது.அந்த வகையில் என்னுடைய பார்வையில் இக்கிராமம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாகி இருக்கலாம்.மேலும் இப்பகுதியில் மிகுந்த தமிழ் ஆர்வலர்கள் காணப்படுவதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.அதாவது ஆங்கிலேயர் காலத்தில் சிரிவர்தனபுரம் என்ற இலங்கைக்கு 1840ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்தியாவிலிருந்து குறிப்பாக தென்இந்தியாவிலிருந்து பல குடும்பங்களை தேயிலை தோட்டப் பணிக்காக இலங்கையில் உள்ள மலையகத்திற்கு கொண்டு சென்றனர்.அந்த விபரம் மிக கொடுமையானது ஏனென்றால் பல வாக்குறுதிகளை சொல்லி அழைத்து சென்றவர்கள் மன்னார் வளைகுடாவரையில் கப்பலில்? அழைத்து சென்றவர்களை இறக்கிவிட்டு மன்னாரிலிருந்து கண்டியிலுள்ள மலையகம் வரையில் கால் நடையாகவே சுமார் 1450 மைல் கொண்டு சென்றனர்.அப்போதுதான் நாம் ஏமாற்றப்பட்டோம் என்று புரிந்துகொண்டும் வேறு கெதியில்லாமல் அங்கேயே பல குடும்பங்கள் அழிந்தன மீதமிருந்த குடும்பங்கள் ஜெர்மனி,இங்கிலாந்து,கனடா என்று நாடு கடந்து தப்பித்தனர்.எஞ்சிய குடும்பங்களின் வாரிசுகளே இன்று இந்த கிராமத்தில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள்.இக்குடும்பங்கள் 1940 ஆண்டு காலப்பகுதியில் மீண்டும் தங்களின் தாய்நாட்டில் குடியேறினர்.இப்போதும் சில பேரின் உறவுகள் இலங்கையில் உள்ளதாகவும்,இல்லை அவர்கள் கனடாவுக்கும்,பிரித்தானியாவிற்கும் இடம்பெயர்ந்து விட்டார்கள் என்றும் பேச்சு நிலவுகிறது!.நான் கூட 1984 ஆண்டு இரண்டு குடும்பங்களுக்கு(சின்னு அம்பலம்-அண்ணாமலை&சன்ஸ்,காவல்தோட்டம்,கந்தப்பாலை.கண்டி) இடையே இருந்த கடிதப் பரிமாற்ற ஆவணங்களை கண்டேன்.அவர்கள் ரத்தத்தில் விம்மும் மன குமுரல்களே இன்று போராட்டமாக வெடிக்கிறது.இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இன்று பல இளையதலைமுறையினர் எதுக்காக நாம் இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவளிக்கிறோம்! ஏன் நமக்கு மனதளவில் வலிக்கிறது என்று அறியாமலே போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.அதாவது இவர்களின் முன்னோர்கள் இலைங்கையில் பட்ட துரதிஷ்டவசமான இன்னல்களின் கோபம்,எரிச்சல் இவையனைத்துமே ரத்தத்திலே ஊறியுள்ளது.எம்ஜிஆர்-க்கும் இப்பகுதி மக்களுக்கும் என்னவொரு ஒற்றுமை என்றால் இப்பகுதி தலைமுறையினரும் எம்ஜிஆர் எனும் தங்கத்தின் தங்கமும் கண்டி பகுதியைச்சேர்ந்தவர்கள்.இவ்வரலாறு தெரியாத சில பதருகளே இவர்களை விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட்டு அறிக்கை வெளியிடுகின்றனர்.அதுவும் ஒரு அரசியல் சுய லாபத்துக்காகவே அவர்கள் அவ்வாறு செய்கின்றனர்.மற்றபடி இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் இல்லை! ஆங்கிலேயர்களால் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு சென்று பின் மீண்டும் தங்களில் தாய்நாட்டுக்கு திரும்பிய வலிமைமிக்க தமிழ்நாட்டு தமிழ் இனம்.உண்மையில் இனப்பற்று மிகுதியாகக் காணப்படும் சுமார் பதினைந்து கிராமங்கள் இப்பகுதியில் உள்ளன.அவைகளில் வடகாடு,மாங்காடு,அனவயல்,ஆவணம் கைகாட்டி,கொத்தமங்கலம்,குளமங்கலம் வடக்கு மற்றும் தெற்கு,பனங்குளம்,கீரமங்கலம்,சேந்தங்குடி,மேற்பனைக்காடு, செரியலூர் மற்றும் இவ்வூர்களை சுற்றியுள்ள சிற்றூர்களும் குறிப்பிடப்படும் அளவுக்கு மிகுந்த தமிழ் ஆர்வலர்களைக் கொண்ட பகுதிகள் ஆகும்.மேலும் இப்பகுதிகள் அனைத்தும் முத்தரையர் சமூகத்தால் சூழப்பட்ட பலம் பொருந்திய பகுதிகள் ஆகும்.எனவேதான் இப்பகுதியின் சட்ட மன்ற தொகுதியான ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் பதவி கடந்த காலங்களில்(1977-2006) அனைத்து தேர்தல்களிலும் இந்த வகுப்பினரே வெற்றிபெற்றுள்ளனர். இவ்விடத்தில் ஒரு முக்கிய விடயத்தினை குறிப்பிட விரும்புகிறேன்.அதாவது கடந்த 2010 மாசி மாதம் தாயகத்தில்(தமிழ்நாடுதான்) இருந்தபோது நான் கண்ட ஒரு முக்கிய விடயம் என்னவென்றால் இப்பகுதியில் 2009-2010 ஆண்டு காலப்பகுதில் பிறந்த பல ஆண் பிள்ளைகளுக்கு தமிழினத்தலைவன் மேதகுரு பிரபாகரன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.(இத்தகவல் எதிர்பாராத விதம் அரசு ஆவணத்தில் இருந்து எனக்கு பார்க்க வாய்ப்பு கிடைத்தது).அதே காலப்பகுதியில் இப்பகுதியின் தற்போதைய தென்பகுதியில் உள்ள ஆற்றுப் பகுதியின் கரையோரங்களில் விவசாயம் செய்து வாழ்ந்தவர்கள் சில குடும்பங்களே அவர்களே வடகாட்டான் கரைக்காரர்கள்.மற்ற வகையறாக்களான வந்திக்கார வகையறாக்கள்,தோழ& பூனைக்குட்டிபட்டி வகையறாக்கள்,சேர்வைகார வகையறாக்கள் இவ்வனைவரும் இங்கு குடியேறியவர்களே.வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் இவ்வூர் மட்டும் விதிவிலக்கா என்ன?இப்போது வந்தவர்களின் பிடியிலே இவ்வூரின் முக்கிய பொறுப்புகள் உள்ளன.

சில தேர்தல் காலங்களில்(2009) இந்த ஈழ தமிழர் இயக்கத்தை வாய் வழியே சொல்லிக்கொள்ளும் சில ஈன பிறவிகள் இயக்க உணர்வுகளை விலைக்கு விற்றுள்ளனர்.அதுவும் இதே பகுதியில் பிறந்து வளர்ந்த ஈன பிறவிகள்.
இந்த விஷயத்தை தொடர்ந்து இயக்க உணர்வாளர்கள் மத்தியில் கடும் விரிசல் ஏற்பட்டு இப்போது துண்டு துண்டாக சிதறிக்கிடக்கும் கோலத்தை காண முடிகிறது.

No comments:

Post a Comment

 
Copyright 2009 VadakaduOnlineInfo. Powered by Blogger Blogger Templates designed by vadakaduPoeple