Tuesday, August 10, 2010

பண்பாடு

தங்களிடையே பண்பாட்டை நிலைநாட்ட மிக நேர்த்தியான சில வரைமுறைகளை இப்பகுதி முன்னோர்கள் வகுத்துள்ளார்கள்.

அவைகளாவன....

(அ)வடகாட்டான் கரைகாரர்கள்
(ஆ)வந்திக்கார வகையறாக்கள்
(இ)தோழ&பூனைக் குட்டிபட்டி கரைகாரர்கள்
(ஈ)சேர்வைகார வகையறாக்கள்

இந்த குழுவுக்குள்ளே இப்பகுதி மக்கள் அனைவரும் உள்ளடங்குவார்கள்.அதாவது வடகாடு கிராமம் தன்னுள் பதினெட்டு பட்டிகளை கொண்டுள்ளது.

அவைகளாவன....

1.சேர்வைகாரன் பட்டி
2.சுந்தன் பட்டி
3.பருத்திக் கொல்லை
4.தோழன் பட்டி
5.பூனைக்குட்டி பட்டி
6.வடக்கு பட்டி
7.குறுந்தடிக் கொல்லை
8.பரமன் பட்டி
9.பள்ளத்து விடுதி
10.பாப்பா மனை
11.புள்ளாச்சி குடியிருப்பு
12.மாங்க்குட்டி பட்டி
13.வினாயகம் பட்டி
14.தெற்க்கு பட்டி
15.பிலா கொல்லை
16.சாத்தன் பட்டி
17.கூட்டான் கொல்லை
18.செட்டியார் தெரு

இத்தெருக்களை மேற்கண்ட நான்கு குழுவுகளுக்குள் உள்ளடங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்த குழுக்களின் விபரம் பின்வருமாறு..

(ஈ)சேர்வைகார வகையறாக்கள்

சேர்வைகாரன் பட்டி இப்பட்டி மட்டும் தனித்து இக்குளுவுக்குள் உள்ளடங்கியது.காரணம் அன்றைய முன்னோர்களின் மதிப்பீட்டில் இத்தெரு மக்கள் ஆலய விழாக்காலங்களில் விசேச சம்பிரதாய சடங்குகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தார்கள்.இன்றும் அம்முறையே பின்பற்றப்பட்டுவரும் நிகழ்வினை காண முடிகிறது.அதென்ன அந்த சடங்கு?அதாவது இக்கிராமத்தின் மேற்கு பகுதியில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளது.அந்த ஆலயத்தின் திருவிழா காலத்தின் போது இவர்களது தெருவில் இருந்து ஒருவர் குதிரையின் மீது அமர்ந்து வந்து திருவிழாவுக்கான தேரின் வடம்பிடித்து தொடங்கிவைப்பார்.மேலும் மற்ற தெரு மக்களால் இப்பகுதி மக்களை சேர்வை என்று மதிப்புடன் அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
எ.கா திரு.ராமசாமி சேர்வை,முத்து சேர்வை.

இக்கிராமத்தின் திருமண முறையினை விளக்கும் பட அமைப்பு...


மேலே குறிப்பிட்ட குழுக்களான மூன்றும் ஒன்றை ஒன்று எதிர்ப்பவை(மாமன் மச்சான் முறை) ...இவ்வாறு இருக்கும் பட்சத்தில் சேர்வை என்ற குழு மட்டும் அனைத்து குழுக்களுடனும் திருமண முறையினை கொண்டுள்ளது.மற்ற குழுக்கள் எந்த கால கட்டத்திலும் அதனுடைய எதிர் குழுவில் மட்டுமே திருமணம் செய்ய முடியும்.ஒரே குழுக்களுள் இதுவரை ஒரு திருமணம் கூட நிகல்ததில்லை....இதுவே ஒரு சிறப்பான பண்பாட்டு கட்டமைப்பு.இதற்கு ஏதுவாக அனைத்து தெருக்களும் குழு வாரியாக பிரிக்கப்பட்டு உள்ளது.எகா தொழ/பூனை குழுவில் உள்ள தெரு இரண்டும் அடுத்தடுத்து இருக்கும்,வந்திக்கார குழுவில் உள்ள தெருக்கலான சாத்தன்பட்டி,கூட்டான்கொல்லை,பருத்திக்கொல்லை,தெற்குபட்டி என அடுத்தடுத்து தொடந்து அமைந்திருக்கும்.

இந்த முறை திருமண நிகழ்வுகளில் மட்டுமில்லாமல் மற்ற வைபோக விஷேசங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.எகா சில குறிப்பிட்ட விஷேசங்கலான பெண்கள் சம்பந்தமான சடங்குகள்,பிறப்பு,இறப்பு போன்ற துக்க காரியங்களிலும் இதே குழுக்கள் முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.ஆகவே பக்கத்து வீட்டு சக தோழன்களுடன் அல்லது தோழிகளுடன் ஒரு சுமூகமான உறவு இருக்கும்.இதே ஒரு சில குடியிருப்புகளினுள் மட்டும் மற்ற பட்டியைச்சேர்ந்த 1 அல்லது 2 குடும்பம் இருக்கும் பட்சத்தில் ....இந்த இளவட்டங்களுக்குள் காதல் விவகாரம் தலைதூக்கும்! இந்த விவகாரத்தில் அடிக்கடி சிக்கிக் கொள்ளும் தெரு பரமன் பாட்டியாகும்.காரணம் இப்பட்டியானது மிகப்பெரிய தெரு மற்றும் இத்தெருவில் மட்டும் இரண்டு வகையான குழுக்கள் உள்ளனர்.இந்த விவகாரத்தில் சிக்கி அதனால் அவர்கள் குடும்பம் சின்னா பின்னமான லிஸ்ட் வடகாடு போர்டலில் அதிவிரைவில் வெளிவரும்.மற்றபடி திருமணம் செய்ய முற்படும்போது முதலில் விசாரிப்பது அந்த பெண்ணோ அல்லது பையனோ எந்த குழுக்களுக்குள் உள்ளடங்குவார்கள் என்பதை உறுதி செய்த பின்னரே மேற்படி விசயங்கள் முன்னெடுக்கப்படுவது வழக்கம்.இதில் சேர்வைக்காரன் பட்டி என்ற ஒரே ஒரு தெரு மக்களுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடோ,முறைகளோ திருமண விசயங்களில் கிடையாது!.இவர்கள் மட்டும் எங்கு வேண்டுமானாலும் எந்த பட்டியில் வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம்!அதென்னவோ தெரியவில்லை ஒரு பழமொழி இவர்களுக்கு மட்டும் இப்பகுதியில் சொல்கிறார்கள்.
"அம்மன் குளத்துக்கு கரையும் இல்லை! சேர்வைக்கு முறையும் இல்லை!"

No comments:

Post a Comment

 
Copyright 2009 VadakaduOnlineInfo. Powered by Blogger Blogger Templates designed by vadakaduPoeple