Tuesday, August 10, 2010

சமூகம்

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்" - என்கிறது குறள்.

எவ்வித பேதமும் இன்றி விவசாயம் ஒன்றே தொழில் அதுவே வாழ்வாதாரம் என்று காலத்தின் கண்ணாடியில் தினம் தினம் செத்து பிழைக்கும் கூட்டம் இந்த விவசாயிகள் கூட்டம்.

வடகாடு கிராமம் ஒரு சிறந்த ஒற்றுமையுடன் கூடிய கிராமத்துக்கு எடுத்துகாட்டு ஆகும்.காரணம் இக்கிராமத்தில் உள்ளடங்கிய பதினெட்டு பட்டிகளும் ஒரே சமூகமான முத்தரையர் என்ற வகுப்பினுள் அம்பலகாரர் என்ற இனத்தை சேர்ந்தவர்கள்.ஆகையால் இப்பகுதில் எவ்விதமான இனப்பிரச்சனையும் எழுவதில்லை.2006 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி 7,894 மக்கள் வசிக்கின்றனர்.பட்டிக்கு(தெரு) தலா நூறு குடும்பம் வீதம் மொத்த குடும்பங்கள் எண்ணிக்கை 1,800 உள்ளது.வீட்டுக்கு ஒரு ஆண் பிள்ளை வீதம் பதினைந்து வயதுக்கு குறைவாக உள்ளனர் ஆகையால் இளைஞர்கள் பரவாக உள்ளனர்.இப்பகுதியில் மக்களிடையே தமிழ் மொழிப்பற்று சற்று மிகுதியாகவே காண முடிகிறது அது படித்தவரானாலும் சரி படிக்காதவரானாலும் சரி தமிழ்மொழி,தமிழ்இனம் என்று முன்மொழிவதை மிகுதியாகக்காண முடியும்.
முழுத்தகவல்கள் வெளிஇணைப்பு

No comments:

Post a Comment

 
Copyright 2009 VadakaduOnlineInfo. Powered by Blogger Blogger Templates designed by vadakaduPoeple