"உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது" என்பதுதான் இன்றைய நிலை!!.மத்திய மற்றும் மாநில
அரசாங்கமானது பலவழிகளில் விவசாயத்திற்கான மடைகளை திட்டமிட்டு அடைத்துவருவதும் இவைகளுக்கு முக்கிய காரணமாகும்.அதில் முக்கிய சில விடயங்களை தருகிறேன்...
விவசாயத்திற்கான பாசன வசதிக்கு மின்சார மோட்டார்களை மட்டுமே இப்பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.அந்த வகையான மோட்டார் அமைக்க பல லட்சம் ரூபாய் செலவு செய்யவேண்டியுள்ளது.அப்படி செலவு செய்தாலும் மின்சார விநியோகமானது ஆட்சியாளர்களின் சொந்த விருப்பத்திற்கு ஏற்ப விநியோகிக்கப்படுகிறது.இன்றைய சூழலில்(2010) நாளாந்தம் ஆறு மணிநேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் கிடைக்கிறது.அதுவும் பல நேரங்களில் தொடரில்லா மின்சாரம் (Intermediate Power Suply) சில நிமிடத்துக்கு ஒருமுறை நிகழும்.அதன் விளைவாக பல பேரின் மோட்டார்கள் பழுதடையும் சூழல் நிலவுகிறது.அதிகாரிகளுக்கோ,ஆட்சியாளர்களுக்கோ அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை? " எவன் குடி எக்கேடுகேட்டால் எனக்கென்ன" என்று கண்ணாடி அறைக்குள் இருந்துகொண்டு ஏட்டு சுரைக்காய் கதைபேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.இந்த லட்சனத்தில் இலவச மின்சாரம் தருகிறோம்! இலவச மின்சாரம் தருகிறோம்!! என்று மேடை வழியே பீத்திக் கொள்ளும் அரசுகள் எப்போதுதான் திருந்துவார்களோ என்னவோ!அவர்கள் திருந்துவார்களோ என்னவோ விவசாயிகள் திருந்திவிட்டனர்.ஆம் கடந்து 2000ஆண்டு காலப்பகுதியில் இவ்விடயங்களை நன்கு உற்றுநோக்கிய விவசாயிகள் அவர்களது வாரிசுகளை கணினித்துறைக்கு படிக்கவைத்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டனர்.அதன் விழைவாக தற்போது பல குடும்பங்களில் விவசாயம் செய்ய ஆளில்லாமலும்,போதிய மின்சார தேவையின்மையாலும் விவசாயம் முற்றிலும் அழிந்துகொண்டு வருகிறது.அதேநேரத்தில் அவ்விவசாய இடங்களில் பலவகையான பழ மரங்களை பயிரிட்டுள்ளனர்.அதில் குறிப்பிடப்படும் பழ வகை பலாப் பழம்.புதுக்கோட்டை பகுதியில் பழாப்பழத்திற்கு இவ்வூர் பெயர்பெற்றது.
அடுத்து அனைத்து வகையான மலர்களும் இங்கு சாகுபடி செய்யப்படுகின்றன.
இன்றைய மின்சார மோட்டார் பயன்படுத்தும் நிலை....
மும்முனை மின்சார Starter அமைப்பு
சில விவசாயிகளின் நிலை
பல விவசாயிகளின் நிலை
நீரின்றி அமையாது இவ்வுலகு!
பலாப்பழம் மற்றும் அதன் சாகுபடி குறித்து ஒரு சிறிய கட்டுரை...
இப்படத்தில் சுமார் 50 பலாப்பழங்கள் விளைந்துள்ளன.சராசரியாக ஒரு மரம் 25 பழங்களுக்கு குறைவில்லாமல் விளைச்சளைக்கொடுக்கின்றன.ஒரு மரம் தன் மூன்றாவது வயதில் காய்ப்புக்கு வருகிறது.இவை அனைத்து மர வகைகளும் நாட்டு மரம் என்று சொல்வார்கள்.இதே அரசாங்கத்தால் கொடுக்கப்படும் மர வகைகளை விவசாயிகள் நம்பி வாங்க முன்வருவதில்லை காரணம் அதிகாரிகளின் ஏட்டுச்சுரக்காய் பேச்சுதான்...வேறென்ன காரணம்? அது என்ன வென்றால் அதிகாரிகள் சொல்வது " எங்களின் பலா கன்று எண்ணி ஒரே வருடத்தில் காய்ப்புக்கு வந்துவிடும் மேலும் வருடத்திற்கு குறைந்தது 100 பழங்களை கொடுக்கவல்லது" என்று வாய்க்கு வந்தவைகளை எல்லாம் விவசாயிகளின் காதில் போட வேண்டியது! இதை நம்பி வாங்கிய விவசாயிகள் கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது! காரணம் பல உள்ளன... சில நேரம் இயற்கை ஒத்துழைப்பு அளிப்பதில்லை ...அரசாங்க பண்ணையில் சரியான வெப்பம்,சரியான தண்ணீர், சரியான ஊட்டச்சத்து போன்றவைகளை அளந்து அந்த கன்றுகளுக்கு கொடுப்பார்கள்.ஆனால் அதே பக்குவத்தை விவசாயிகள் பல மரங்களுக்கு கொடுப்பதில் பல விதமான சிரமங்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது.அதனாலேயே அரசாங்க கன்றுகளின் குணாதிசயங்கள் எதுவும் விவசாயிகளுக்கு புலப்படுவதில்லை!.இதே நேரத்தில் நாட்டு மரமானது எல்லாவிதமான சீதோஷ நிலைகளையும் எதிநோக்கும் மற்றும் தாங்கும் திறனும் கொண்டுள்ளது.மேலும் ஒரு சிறப்பான பயன் என்னவென்றால் மரம் வயதாக வயதாக காய்ப்பும் மேலோங்கும் மரத்தின் விலையும் மேலோங்கும்.இதன் காரணமாக இன்று வீட்டுக்கு ஒரு பலா மரமாவது இப்பகுதியில் உள்ளது.மேலும் இப்பகுதி பலா பழத்தில் தேன்போன்ற சுவை இயற்கையாகவே இவ்வூர் மண் கொடுக்கிறதாக காதுவழிச்செய்தி! இங்கு விளையும் பழங்கள் பட்டுக்கோட்டை,பேராவூரணி மற்றும் புதுக்கோட்டையின் கடலோர மாவட்டங்களிலும் காரைக்குடி, பரமக்குடி,தேவகோட்டை போன்ற பகுதிகளுக்கு மிகுதியாக விநியோகம் செய்யப்படுவது வழக்கம் மற்ற பகுதிகளுக்கு இவ்வூர் பழங்களின் சுவை பற்றியோ அதன் தரம் பற்றியோ தெரிய வாய்ப்பில்லை!
இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பலாப் பழ மரம் .....
வடகாடு பலா மரம் Vadakadu Jackfruit Tree
VADAKADU Picture's
No comments:
Post a Comment