Tuesday, August 10, 2010

உள்கட்டமைப்பு


இயற்கையின் மடியில்


உள்கட்டமைப்பு என்றவகையில் இவ்வூர் மிக நேர்த்தியான சுற்றமைப்பு கொண்டுள்ளது.இறைவனின் அருளால் நல்ல நீரோட்டம் இப்பகுதிக்கு கிடைத்த வரம்.அதுவும் சிறிது வடக்கு பகுதியில் மட்டும் நீர்மட்டம் குறைவுதான்...தெற்கு பகுதியில் நல்ல நீர்மட்டம் மற்றும் சுவையான குடிநீரும் கூட.விவசாயம் செய்ய நல்ல உள்கட்டமைப்பு கொண்ட கிராமம் இருந்தும் மின்சார பற்றாக்குறை இப்பகுதிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.மா,பலா உற்பத்திக்கு ஏற்ற மண் இப்பகுதியில் காணப்படுகிறது.

இக்கிராமத்தினை மாநில நெடுஞ்சாலை இரண்டாக பிரிக்கிறது அதாவது புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் இந்த சாலையே இக்கிராமத்தின் மையப்பகுதி.இந்த சாலைக்கு தென்புறத்தில் உள்ள மண் தன்மை மணல் கலந்த பகுதியாகும் வடக்கு பகுதி சிறிது செம்மண் கொண்ட பகுதியாகும் எனவேதான் தென்பகுதியில் உள்ள நீர் குடிப்பதற்கு சற்று சுவையாக உள்ளது.மொத்தத்தில் சுகாதாரமான வகையில் வாழ சிறந்த இடம்.

மக்களின் பிடியில் வடகாடு

மனித குலத்திர்க்கே உரிய குணம் போட்டி,பொறாமை,மன எரிச்சல் போன்ற குணங்கள் இப்பகுதி மக்களிடமும் பரவலாக காணப்படுகிறது.இருந்தும் சில சந்தர்ப்பங்களில் அவைகளை மூட்டைகட்டி வீட்டுக்குள் வைத்துவிட்டு ஆலய விழாக்களில் அனைவரும் ஒன்றுகூடும் சிறப்பான ஒற்றுமையை இப்பகுதியில் காணலாம்.மேலும் மொய் விருந்து என்ற ஒரு பழக்கம் தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்குப்பகுதி தொடங்கி தஞ்சை மாவட்டத்தின் மேற்குபகுதி வரையில் பரவலாக காணப்படும் நிகழ்ச்சி!
சில திரைப்படங்களில் வரும் காட்சி போல சாப்பாட்டு இலையின் கீழ் பணம் வைத்துவிட்டு செல்லுதல் போன்ற நிகழ்வு இங்கில்லை.பல லட்சங்கள் புரளுகின்றன இம்மொய்விருந்து விழாவில்.சில பத்திரிகைகள் உண்மைக்குப்புறம்பான செய்திகளை மொய்விருந்து விழாவோடு சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிடுகிறது.ஒருவேளை அச்செய்தி தொகுப்பாளர் இவ்விழாவின் மீது காழ்புணர்ச்சி கொண்டுள்ளாரோ என்னவோ? காரணம் இவ்விலாவானது பல எழிய குடும்பங்களை பொருளாதார அடிப்படையில் உயர்த்தியுள்ளமைக்கு பல குடும்பங்கள் எகா உள்ள நிலையில் இவ்விழாவின் மூலம் கருப்பு பணம்,ஹவாலா என கட்டுக்கதை கட்டும் தினமலர் ஏன் அந்த பண முதலைகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டியதுதானே?.இந்த தினமலர் எப்போதுமே சால்ரா போடுவதிலேயே குறியாக இருக்கும்...காரணம் ஆங்கிலேயன் இந்தியாவில் காலூன்ற காரணமாயிருந்த ஆரியர்களின் கூட்டம்தானே இந்த தினமலர் கூட்டம்.

மொய்விருந்து விழாவின் பிரத்தியேக படங்கள்

மொய்விருந்து விழாவின் வரவேற்ப்பு போர்டு

விழாவினை சிறப்பிக்க வெடித்த வெடிகளின் ஒரு பகுதி!











பைசா வசூல் செய்யும் இடம் உடன் விளக்க அறிவிப்பு.






இந்த மொய்விருந்து விழாவினை சிறப்பாக ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் திறம்பட செயல்படுத்தி வரும் நிறுவனம் தாயகம் மறுதோன்றி அச்சக(ம்), உரிமையாளர் திரு.தாயகம் தமிழரசன் அவர்கள்.கிராமம் வாரியாக பல கிளை அலுவலகங்களை கொண்டுள்ள இந்நிறுவனம்,இதன் தலைமை அலுவலகம் வடகாடு.அவரது விழா அழைப்பிதல் இதோ...




மொய்விருந்துக்கான தேதி மற்றும் அதன் முழு விபரம் குறிப்பிட்ட பகுதிமட்டும்...



















இந்த மொய் விருந்து குறித்த பல்வேறு விமர்சனங்களும் மக்களின் கருத்துக்களும்...


*இந்த மொய் விருந்து விழாவில் கிடைத்த பணத்தில் அசையா சொத்துக்களை வாங்கி பின் அதனால் அல்லல்படும் சில தரப்பினர் இவ் விழாவினை அறவே எதிர்க்கின்றனர்.

*இவ்விழாவின் மூலம் கிடைத்த தொகையினை லாபம் தரும் தொழில்களில் முதலீடு செய்யும் தரப்பினரோ இது ஒரு பேருதவியாக உள்ளது என்று சொல்கிறார்கள்.

*இப்போதுதான் பல்வேறு வங்கிகள் படிப்பிற்காக கடன் தருகின்றன.ஆனால் கடந்த காலங்களில் இந்த விழாவில் கிடைத்த பணத்தை வைத்து பட்டம் பெற்றவர்களும் உள்ளனர்.அதில் ஏராளமானோர் இப்போது நல்ல வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளார்கள் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில்(IT Field).

*நல்ல ஒற்றுமைக்கு எகா இந்த விழா அமைகிறது.சில நேரம் இதுவே மிகப்பெரிய பாதக விளைவுகளை உமிழ்கின்றது!!!!

*சில நபர்கள் தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர்!அதற்க்கு பல்வேறு காரணங்களும், விமர்சனங்களும் இருந்தன?
*இப்பகுதியினருக்கு மொய்விருந்து MOIVIRUNTHU moi virunthu விழாவானது விடாது கருப்பு ஆகும்.

-தொகுப்பு: விடாது கருப்பு,வடகாடு

No comments:

Post a Comment

 
Copyright 2009 VadakaduOnlineInfo. Powered by Blogger Blogger Templates designed by vadakaduPoeple