கல்வி என்று எடுத்துக் கொண்டால் பட்டி வாரியாக தரம் பிரிக்கலாம்.கல்வி அறிவு பெற்ற பட்டிகளின் சாரம் பரமன் பட்டி,வடக்குப் பட்டி,பாப்பா மனை,பள்ளத்துவிடுதி,சாத்தன் பட்டி.......என்று கடைசியாக சுந்தன் பட்டி என்ற தெருவில் வந்தடையும்.மொத்த கிராமத்தின் கல்வி அறிவு 60 சதவிகிதம் என்று தோராயமாக கணக்கிடலாம்.தற்போதைய நிலவரப்படி வீட்டுக்கு ஒருவராவது கல்வியறிவு பெற்றுள்ளனர்.அம்மாதிரியான குடும்பங்களில் அரசியல்வாசம் வீசும் அதுவும் எம்ஜிஆர்,காமராசர் என்றுதான் பகிரங்கமாக வீசும்.காரணம் இப்பதிவினை பதியும் நான் கூட பள்ளிக் கூடத்துக்கு போனதே மதியம் நெல்லுக் கஞ்சி வாங்கி குடிக்கத்தான்(தண்ணியும் பருக்கையுமா இருந்தால் குடிக்கத்தானே முடியும்?).அதனாலே எனக்கு கூட மூன்றேழுத்து மூச்சுதான் பிடிக்கும்.
இப்பகுதியில் கல்வி அறிவுக்கு பின் அடுத்த மைல்கல் கனிணி துறை,இன்று பலபேர் இத்துறையில் நுழைந்துள்ளனர்.கடந்த 1989 ஆண்டு முதல் கணினித் துறையில் சர்வதேச அளவிலான சான்றிதல்களைப்பெற்ற நபர்கள் இப்பகுதியில் உள்ளனர்.பல பேர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.சில பேர் சென்னையில் பணிபுரிகின்றனர்.
அனைத்து துறைகளிலும் பொறியாளர்களும்,இளநிலை,முதுநிலை பட்டதாரிகளும்,மருத்துவர்களும் குறிப்பிடப்படும் எண்ணிக்கையில் உள்ளனர்.பெண்கள் மேற்படிப்பு என்பது இப்போது மிக தீவிரமாக உள்ளது.அதுவும் ஆண்களுக்கு நிகராக பொறியியல் துறையிலும் மருத்துவத் துறையிலும்.மேலும் செவிலியர் துறைக்கு சற்று மந்த தன்மையான முன்னுரிமையே காணப்படுகிறது.எவ்வளவு படித்தாலும் தமிழுக்கு எப்போதுமே முதல் இடம் கொடுப்பதை இப்பகுதி மக்களில் தெளிவாக காண முடியும்.இப்பகுதி மக்களில் மூன்றில் ஒருபங்கு குடும்பத்தார்கள் BBC தமிழோசை செய்திச் சேவையை கடந்த 20 ஆண்டுகளாக கேட்டுவருகின்றனர்.இப்போது இணையதளத்தின் ஊடாக கேட்கின்றனர்.அந்த அளவுக்கு உலக நடப்பு தெரிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர்கள்.
Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts